அப்போதெல்லாம்
அப்பாவிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டபடி
ஆனந்தமான ஒரு சில ரயில் பயணங்களைக் கடந்ததுண்டு...
அப்பாவும் மகளுமாக...
இப்போதெல்லாம்
அடிக்கடி ரயில் பயணங்கள்
உறவுகள் பிரிந்ததினாலும்....
பேருந்து கட்டணம் உயர்ந்ததினாலும்...
வெள்ளித் தலையுடன்
அரைக்கை சட்டை போட்டுக் கொண்டு
அழகான மூக்குக் கண்ணாடியுடன்
அப்பாவின் தோற்றத்தில் ஒருவராவது
எதிரே வந்து அமர்ந்துவிடுகின்றனர்..
அப்பாவே உயிருடன் வந்து அமர்ந்துவிட்டஉணர்வை
கண்ணீர் நொடிக்கொருமுறை நினைவுபடுத்துகிறது...
வேறு கண்கள் கண்ணீரை பார்த்துவிடக் கூடாதென்று
அதே நொடியில்
கண்களே கண்ணீரை விழுங்கிக் கொள்ளும் கண்ணீர்ப் பயணமாய்க் கசந்து போகிறது
எனது மகள்கள் இருந்தாலும் கூட...!






